இந்திரா என் செல்வம்: கொஞ்சம் அதிகமான ‘கண்ணீர் காவியம்’ | indira en selvam an emotinal classic tamil film

✍️ |
இந்திரா என் செல்வம்: கொஞ்சம் அதிகமான ‘கண்ணீர் காவியம்’ | indira en selvam an emotinal classic tamil film


ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை, கிட்டத்தட்ட ஆட்சி செய்த நடிகர்களுள் ஒருவர் எம்.ஆர்.ராதா. தனது தனித்துவமான நடிப்பாலும் பேச்சாலும் ரசிகர்களைக் கவர்ந்த அவர், வில்லன், குணசித்திரம் என பிசியாக, படங்களில் நடித்து வந்த நேரம் அது. அப்போது அவர் வில்லனாக நடித்த படங்களில் ஒன்று ‘இந்திரா என் செல்வம்’. நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மிரட்டி வந்த அசோகன் கதாநாயகனாக நடித்த படங்களில் ஒன்று இது.

ஒரு குழந்தையைச் சுற்றி நடக்கும் கதை. பிரசவத்தில் தாய் இறந்துவிட, இரக்கம் கொண்ட செவிலியர் ஒருவர் அந்தக் குழந்தையை வளர்க்கிறார். இதற்கிடையே அந்த செவிலியரின் வாழ்க்கையை ஒரு கொடூர மருத்துவர் சீரழிக்கிறார். இதனால் அவள் வேறொரு ஊருக்குச் செல்ல நேரிடுகிறது. குழந்தை, ஒரு பள்ளியில் தாய், தந்தை, யார் என தெரியாமல் அனாதையாக வளர்கிறது. செவிலியரின் காதலன் உதவியுடன் கொடூர மருத்துவரிடம் இருந்து தன்னையும் குழந்தையையும் செவிலியர் எப்படி மீட்கிறார் என்பது கதை.

எம்.ஆர்.ராதாவுடன் செவிலியராகப் பண்டரி பாய், காதலராக அசோகன் மற்றும் நாகேஷ், ஏ.கருணாநிதி, டி.கே.சம்பங்கி, ஏ.பி.எஸ்.மணி, ‘ஜெமினி’ சந்திரா, புஷ்பமாலா, சாரதாம்பாள், சூர்யபிரபா, ‘பேபி’ சுமங்கலா, மீனாகுமாரி என பலர் நடித்தனர். கொஞ்சம் அதிகமான ‘கண்ணீர் காவியம்’ தான் என்றாலும் நாகேஷ், ஏ.கருணாநிதியின் நகைச்சுவை அந்த சோகத்தைக் கொஞ்சம் குறைத்தது. இந்தப் படத்தை டங்கன் மணி, சி.பத்மநாபன் இணைந்து இயக்கினர். திரைக்கதை, வசனத்தை விருதை ராமசாமி எழுதினார். அசோகா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.சவுண்டப்பனும், சி.சென்ன கேசவனும் தயாரித்தனர்.

சி.என்.பாண்டுரங்கன், ஹெச்.ஆர்.பத்மநாப சாஸ்திரி இசை அமைத்த இந்தப் படத்தில், ‘உல்லாச மங்கை இல்லாமல் போனால்’, ‘காதலுக்கு காலேஜு எங்கே இருக்கு?’, ‘இன்பம் கொண்டாடும் மாலை’, ‘கன்னி பருவம் அவள்’, ‘ஆடி ஆடி என்ன கண்டாய் நல்ல பாம்பே’, ‘தித்திக்கும் தமிழிலே’, ‘தெல்ல தெளிந்த தேன் அமுதே’ ஆகிய பாடல்கள் இடம்பெற்றன. இதில், ‘உல்லாச மங்கை இல்லாமல் போனால்’, ‘காதலுக்கு காலேஜு எங்கே இருக்கு? ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. பண்டரி பாயும் அசோகனும் காதலர்களாகப் பாடிய இரண்டு பாடல்களில் ஒன்று பொருத்தமற்றது என விமர்சிக்கப்பட்டது அப்போது.

ஏற்காடு, சேலம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்ட இது, 1962-ம் ஆண்டு செப்.13-ம் தேதி வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்றது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1376332' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” - பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” – பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் மம்மூட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான…

``இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம்!" - விஜய் சேதுபதி | ``It was a great debut for my son!" - Vijay Sethupathi

“இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம்!” – விஜய் சேதுபதி | “It was a great debut for my son!” – Vijay Sethupathi

விஜய் சேதுபதி பேசுகையில்,“நான் ‘ஜவான்’ படத்தின் போதுதான் அனல் அரசு மாஸ்டரைச் சந்தித்தேன். அப்போது அவர் இந்தக் கதையைச்…

‘ஹக்’ படத்துக்கு எதிராக ஷா பானுவின் மகள் வழக்கு - பின்னணி என்ன? | Shah Bano daughter files case against the film Haq - what is the background

‘ஹக்’ படத்துக்கு எதிராக ஷா பானுவின் மகள் வழக்கு – பின்னணி என்ன? | Shah Bano daughter files case against the film Haq – what is the background

புதுடெல்லி: முஸ்லிம் பெண்கள் விவாகரத்து குறித்து பேசும் ‘ஹக்’ படத்தை வெளியிடுவதற்கு எதிராக ஷா பானுவின் மகளான பானு…