Bison:“நான் சொன்னதற்கான காரணம் இதுதான்” – நடிகை அனுபமா நெகிழ்ச்சி | Bison: “This is the reason I said it” – Actress Anupama

✍️ |
Bison:``நான் சொன்னதற்கான காரணம் இதுதான்" - நடிகை அனுபமா நெகிழ்ச்சி | Bison: ``This is the reason I said it" - Actress Anupama


இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “பைசன்’. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பைசனின் 10 நாட்கள்… என் இதயம் இன்னும் தனக்குக் கிடைத்த அன்பை எப்படித் தக்க வைத்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டே இருக்கிறது.

சில படங்கள் வெறும் புராஜெக்ட்களாக இருப்பதில்லை, அவை ஒரு உணர்வாக, ஒரு பருவமாக, நமக்குள்ளே ஒரு அமைதியான மாற்றமாக மாறிவிடுகின்றன.

Anupama Parameswaran | அனுபமா பரமேஸ்வரன்

Anupama Parameswaran | அனுபமா பரமேஸ்வரன்

பைசன் எனக்கு அப்படித்தான். என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் வகையில் என்னைப் பாதித்த ஒரு படம். இந்த உலகத்தில் வாழ்வதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

தற்போது, ஷூட்டிங்க் ஸ்பாட் வீடியோவை பகிர்ந்து, “ மாரி செல்வராஜ் சாரின் திரைப்பட உலகின் தொகுப்புக்கு வருக. பைசன் என் திரையுலக சினிமாவுக்கு அப்பாற்பட்டது என்று நான் சொன்னதற்கான காரணம் இதுதான்.

மண், மக்கள், ஒரு இடத்தின் ஆன்மா வழியிலான ஒரு பயணம் எனக்குள் ஏதோ ஒன்றை மாற்றியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பயிற்சிப் பட்டறை போல உணர்ந்தேன்.

கற்பது, கற்பதை திருத்துவது, கற்றுக்கொள்ளாமல் இருப்பது, கற்றுக்கொள்வதை தவிர்ப்பது என உண்மையை சுவாசிக்கும் கதைகளுக்கு மத்தியில் வாழ்ந்த நாள்கள் அவை.

சினிமாவை வாழ்க்கையாக உணரும் உங்கள் உலகின் ஒரு சிறிய பகுதியாக என்னை அனுமதித்ததற்கு நன்றி, மாரி சார்.” என நெகிழ்வாகப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!" - கங்கை அமரன் |" Me and Roja speaks politics!" - Gangai Amaran

“நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!” – கங்கை அமரன் |” Me and Roja speaks politics!” – Gangai Amaran

நான் எனக்கு புதிதாக வரும் வாய்ப்புகளை என்றும் தவிர்க்க மாட்டேன். முதலில் பாட்டு எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் மியூசிக் செய்யும்…

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

என்​னுடைய மந்​திர​வாதி நண்​பன் ரவி, ஏதோ செய்த சேட்​டைக்​காக நயி​னார் ஆசிரியர் அடித்​து​விட்​டார். நாங்​கள் வீட்​டுக்கு போன பின்…

Kaantha: யார் இந்த 'காந்தா' பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this 'Kaantha' Bhagiyashri Borse?

Kaantha: யார் இந்த ‘காந்தா’ பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this ‘Kaantha’ Bhagiyashri Borse?

‘காந்தா’தான் பாக்யஶ்ரீயின் முதல் தமிழ்த் திரைப்படம். துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா ஆகியோர் நடிக்கும் படம், நம்முடைய முதல்…