💡 Dharmendra:60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா

✍️ |
Dharmendra:60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று அவரது இல்லத்தில் காலமானார்

2
பாலிவுட்டிற்கு தர்மேந்திரா வந்த பிறகுதான் பாலிவுட்டின் போக்கே மாறியது

3
அவர் வருவதற்கு முன்பு வரை நடிகர்கள் சோக படங்களிலும், பக்திப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால் அவர் வந்த பிறகுதான் காதல் படங்கள் பெரிய அளவில் தலைதூக்க ஆரம்பித்தன

5
பாலிவுட்டில் 60 ஆண்டுகள் இருந்துள்ள தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

📌 பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று அவரது இல்லத்தில் காலமானார். பாலிவுட்டிற்கு தர்மேந்திரா வந்த பிறகுதான் பாலிவுட்டின் போக்கே மாறியது. அவர் வருவதற்கு முன்பு வரை நடிகர்கள் சோக படங்களிலும், பக்திப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் வந்த…


பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று அவரது இல்லத்தில் காலமானார். பாலிவுட்டிற்கு தர்மேந்திரா வந்த பிறகுதான் பாலிவுட்டின் போக்கே மாறியது. அவர் வருவதற்கு முன்பு வரை நடிகர்கள் சோக படங்களிலும், பக்திப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் வந்த பிறகுதான் காதல் படங்கள் பெரிய அளவில் தலைதூக்க ஆரம்பித்தன. பாலிவுட்டில் 60 ஆண்டுகள் இருந்துள்ள தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் பாலிவுட்டில் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார். நாளை என்ற ஒன்று இல்லை இன்றே வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்ற கொள்கையில் வாழ்ந்த தர்மேந்திராவிற்கு இளம் வயதில் மும்பை வந்து நடிகராக மாறவேண்டும் என்பது கனவாக இருந்தது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் தர்மேந்திரா கேவல் கிருஷண் தியோல் என்ற பெயரில் பிறந்த தர்மேந்திரா பாலிவுட் நடிகர் திலிப் குமாரை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டார்.

முதல் மனைவியுடன்

முதல் மனைவியுடன்

1948ம் ஆண்டு நடிகர் திலிப் குமார் சாஹித் என்ற படத்தில்தான் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதோடு தனது கிராமத்தில் ஒட்டப்பட்டுள்ள சினிமா போஸ்டர்களில் தனது புகைப்படம் இருக்கிறதா என்பதை தேடி சைக்கிளில் ஊர் முழுக்க சுற்றும் தர்மேந்திரா எப்போதும் பெரிதாகக் கனவு கண்டார்.

அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அந்த கனவுகள் இருக்கும். காலை எழுத்தவுடன் தினமும் கண்ணாடி முன் நின்று தன்னால் திலீப் குமாராக மாற முடியுமா என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1960க்கு முன்பு படங்களில் நடித்திருந்தாலும் 1960ம் ஆண்டு வெளியான தில் பி தேரா ஹம் பீ தேரே என்ற படம் தான் அவரை முற்றிலும் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது.

கார் நிறுத்தும் இடத்தில் தங்கிய தர்மேந்திரா

மும்பைக்கு வந்த புதிதில் தர்மேந்திரா மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு தங்குவதற்கு சரியான இடம் கூட கிடையாது. கார்களை நிறுத்தும் கேரேஜில் தங்கிக்கொண்டார். சரியாக வேலை இல்லாமல் டிரில்லிங் கம்பெனியில் ரூ.200 சம்பளத்திற்கு வேலை செய்தார். அதிலும் கூடுதல் வருவாய் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓவர் டைம் வேலை செய்ததாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

✅ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

✅ "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🚀 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…