⚡ Sabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலில் கற்பூர ஆழி பவனி.. பக்தர்கள் பரவசம்! | ஆன்மிகம்

✍️ |
sabarimala 2 2025 11 f4e39d3e8639066f39f21bc4fa437d3d 3x2 Thedalweb Sabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலில் கற்பூர ஆழி பவனி.. பக்தர்கள் பரவசம்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 25, 2025 8:46 AM ISTசபரிமலை ஐயப்பன் கோயிலில் டிஜிபி ரவாடா சந்திரசேகர் தலைமையில் காவல் துறை அதிகாரிகள் கற்பூர ஆழி பவனியில் பங்கேற்றனர், மண்டல பூஜை முன்னிட்டு விழா நடைபெற்றது.சபரிமலைசபரிமலை ஐயப்பன் கோயிலில் காவல் துறை சார்பில் நடைபெற்ற கற்பூர ஆழி பவனியில் டிஜிபி தலைமையில் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது

2
நாளை மறுதினம் நடைபெறும் மண்டல பூஜைக்கு முன்னதாக, திருவிதாங்கூர் தேசவம் போர்டு ஊழியர்கள் மற்றும் காவல் துறை சார்பில் இரண்டு நாட்களுக்கு கற்பூர ஆழி பவனி நடைபெறும்

3
இதன்படி, தேவசம் போர்டு ஊழியர்களின் கற்பூர ஆழி பவனி நேற்று முன்தினம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Dec 25, 2025 8:46 AM ISTசபரிமலை ஐயப்பன் கோயிலில் டிஜிபி ரவாடா சந்திரசேகர் தலைமையில் காவல் துறை அதிகாரிகள் கற்பூர ஆழி பவனியில் பங்கேற்றனர், மண்டல பூஜை முன்னிட்டு விழா நடைபெற்றது.சபரிமலைசபரிமலை ஐயப்பன் கோயிலில்…


Last Updated:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிஜிபி ரவாடா சந்திரசேகர் தலைமையில் காவல் துறை அதிகாரிகள் கற்பூர ஆழி பவனியில் பங்கேற்றனர், மண்டல பூஜை முன்னிட்டு விழா நடைபெற்றது.

சபரிமலை
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் காவல் துறை சார்பில் நடைபெற்ற கற்பூர ஆழி பவனியில் டிஜிபி தலைமையில் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மறுதினம் நடைபெறும் மண்டல பூஜைக்கு முன்னதாக, திருவிதாங்கூர் தேசவம் போர்டு ஊழியர்கள் மற்றும் காவல் துறை சார்பில் இரண்டு நாட்களுக்கு கற்பூர ஆழி பவனி நடைபெறும். இதன்படி, தேவசம் போர்டு ஊழியர்களின் கற்பூர ஆழி பவனி நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், காவல் துறையினர் சார்பில் நேற்று நடைபெற்றது.

இதில், மாநில டிஜிபி ரவாடா சந்திரசேகர் தலைமையில் கூடுதல் டிஜிபி-க்கள் ஸ்ரீஜித், வெங்கடேஷ், பத்தனம்திட்டா காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் பங்கேற்றனர்.

கோயில் கொடிமரம் முன் இரண்டு பக்கமும் கம்பிகளால் இணைக்கப்பட்ட வட்ட வடிவ பாத்திரத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி கற்பூரம் ஏற்றி பவனியை தொடங்கி வைத்தனர். இதனை இரண்டு காவலர்கள் முன்னும் பின்னுமாக அசைத்து செல்லும்போது கற்பூர தீபம் வானை நோக்கி எழுந்து சென்றது. சன்னிதானத்தில் தொடங்கிய இந்த பவனி, மாளிகைப்புறம் கோவிலுக்கு சென்று பின் கோயிலை வலம் வந்து 18 படிகள் முன்பு நிறைவுபெற்றது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

RASIPALAN 3 2026 01 302411f865bc8c04ceb17d0f7d1eaade Thedalweb Today Rasi palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. ஜனவரி 24, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ Today Rasi palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. ஜனவரி 24, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்களுக்கு, இன்று சாதகமான நாளாக இருக்கும் 2 உங்களைச்…

HYP 5721932 thaipusam2026viralimalaimurugantemple 7 Thedalweb தைப்பூசம் வந்தாச்சு - விராலிமலை முருகன் கோவிலில் தேரோட்ட திருவிழா தொடங்கியது...

🚀 தைப்பூசம் வந்தாச்சு – விராலிமலை முருகன் கோவிலில் தேரோட்ட திருவிழா தொடங்கியது…

📌 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவில் தைப்பூச தேர் திருவிழாவிற்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. Source link புதுக்கோட்டை…