“கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்’ திரைப்படம் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக், பாலிவுட்டில் இன்று தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
சமீபத்தில் ‘ரேடியோ நாஷா’ இதழுக்கு அளித்த பேட்டியில், தனது ஆரம்பகாலத் திரைப் பயணப் போராட்டங்கள் மற்றும் வறுமை குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர், “ஆரம்பக் காலத்தில் நமக்குள்ளே ஒரு பெரும்தன்னம்பிக்கையும், நடிப்பின் மீது ஒரு தீராத ஆர்வமும் இருக்கும். ஆனால், அடுத்தடுத்து எதிர்கொள்ளும் தோல்விகளும், நம்முடைய தன்னம்பிக்கையை மெல்ல மெல்லச் சிதைக்கத் தொடங்கும். நம் மீது நமக்கே சந்தேகம் வரத் தொடங்கும்.
என்னையே சந்தேகித்து, ‘நாம் இந்தத் துறைக்குச் சரிப்பட்டு வரமாட்டோமோ’ என்று மனநிலை உண்டானது. அந்த இக்கட்டான மனநிலையை நான் கடந்து வந்துள்ளேன்.
ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் போது, அது கடைசி நேரத்தில் கைநழுவிப் போகும். ஏறத்தாழ 10 ஆண்டுகளாக என்னைத் துரதிர்ஷ்டசாலியாகவே நான் கருதிக்கொண்டிருந்தேன். பெரிய வாய்ப்புகள் தேடி வரும்போது, அவை எதிர்பாராத விதமாகத் தடையாகிப் போகும்.




