[ad_1]
கீர்த்தி ஷெட்டி, “சீமான் சாருடன் பேசியதனால்தான் நான் தமிழ் பேசுவது அதிகமாகியிருக்கிறது. அவரிடம் தமிழ் கத்துக்கிட்டேன். அவர் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அத்தனையும் மேஜிக்கலாக இருக்கும்.
செஃல்பி, போன் என அத்தனைக்கும் தமிழ் வார்த்தைகளைதான் அவர் உபயோகப்படுத்துவார்.
எந்தவொரு விஷயம் சொன்னாலும், அதனை கச்சிதமாக தமிழில் சொல்லுவார். இந்த விஷயம் பற்றியெல்லாம் அப்போது எனக்கு அவ்வளவாக புரியவில்லை.
ஆனால், தமிழ் இப்போது அதிகமாக புரிந்துக் கொள்ளும் அளவிற்கு வந்த பிறகுதான் அவையெல்லாம் எனக்கு புரிகின்றன.” என்றவர், “பிரதீப் ரங்கநாதனிடம் ஏதோ மேஜிக் இருக்கிறது.
உண்மையாகவே, அவர் ஒரு சிறந்த நடிகர். படத்தில் பல இடங்களில் சிறப்பான பணியை அவர் மேற்கொண்டிருக்கிறார்.
ஒரு நடிகராக அதை நான் பார்க்கும்போது எனக்குள் ‘வாவ்’ மொமண்ட்தான் ஏற்பட்டது. அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என சிரத்தைக் கொடுப்பார்.” எனக் கூறியிருக்கிறார்.
[ad_2]
Source link




