ஹன்சிகாவின் இந்த பதில் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. சமூக ஊடகப் பயனர்கள் பலரும் ஹன்சிகாவின் கருத்துக்கு பதிலளித்து வருகின்றனர். ஒரு பயனர், “எனக்குச் சர்க்கரை நோய் இல்லை என்பதால், அந்த நோயே உலகில் இல்லை என்று சொல்வதைப் போல இது இருக்கிறது” என்றார். மற்றொருவர், “பாதுகாப்பான சூழலில் வளர்ந்த ஹன்சிகா, மற்றவர்களின் வலியைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாகப் பேசுகிறார்” எனப் பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர், “உண்மையாக உழைப்பவர்களுக்கு இது நடக்காது என்று சொல்வதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் உழைக்கத் தயாராக இல்லை என்று அவர் கூறுகிறாரா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.




