⚡ “ஏ.ஆர். ரஹ்மான் மற்றவர்களை ஊக்குவிப்பதில் ஒருபோதும் தயங்கியதில்லை!” – சாய் அபயங்கர் |”A.R. Rahman has never hesitated to encourage others!” – Sai Abhyankar

✍️ |
"ஏ.ஆர். ரஹ்மான் மற்றவர்களை ஊக்குவிப்பதில் ஒருபோதும் தயங்கியதில்லை!" - சாய் அபயங்கர் |"A.R. Rahman has never hesitated to encourage others!" – Sai Abhyankar
🔥 முக்கிய குறிப்புகள்:

  • அவர், "முதலில் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஒப்பந்தமாகி இருந்தார் என்பதே எனக்குத் தெரியாது
  • ✅ திடீரென்று திங்க் மியூசிக் குழுவிலிருந்து எனக்கு வழிகாட்டியாக இருக்கும் சந்தோஷ் தொடர்புகொண்டு சூர்யா சார் படத்திற்கு இசையமைக்கப் போகிறேன் என்றார்கள்
  • ✅ இந்தச் செய்தியை அவர்கள் சொன்னதும் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது
  • ✅ அதன் பிறகுதான் ஆரம்பகால போஸ்டர்களில் ரஹ்மான் சாரின் பெயர் இருந்ததைப் பார்த்தேன்.என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் தயாரிப்பாளர்களும், சூர்யா சாரும் என்னை விரும்பும்போது, அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பது என் கடமை


அவர், “முதலில் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஒப்பந்தமாகி இருந்தார் என்பதே எனக்குத் தெரியாது. திடீரென்று திங்க் மியூசிக் குழுவிலிருந்து எனக்கு வழிகாட்டியாக இருக்கும் சந்தோஷ் தொடர்புகொண்டு சூர்யா சார் படத்திற்கு இசையமைக்கப் போகிறேன் என்றார்கள்.

[ADSENSE-RESPONSIVE]

இந்தச் செய்தியை அவர்கள் சொன்னதும் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகுதான் ஆரம்பகால போஸ்டர்களில் ரஹ்மான் சாரின் பெயர் இருந்ததைப் பார்த்தேன்.

என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் தயாரிப்பாளர்களும், சூர்யா சாரும் என்னை விரும்பும்போது, அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பது என் கடமை. நான் ரஹ்மான் சாரிடம் இது குறித்துப் பேசினேன். அவருக்கு இதில் எந்தத் தயக்கமும் இல்லை.

சாய் அபயங்கர்

சாய் அபயங்கர்

அவர் மற்றவர்களை ஊக்குவிப்பதில் ஒருபோதும் தயங்கியதில்லை. நூறு பிரச்னைகள் இருந்தாலும் அவர் மிகவும் அமைதியாக இருப்பார். அது எனக்குப் பெரிய உத்வேகத்தைத் தருகிறது” என்றவர், ‘பத்து தல’ படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அவர், “சிலம்பரசன் நடித்த ‘பத்து தல’ படத்தில் நான் பணியாற்றிய போது, ரஹ்மான் சார் திடீரென அறைக்குள் வந்து நான் உருவாக்கிய இசையைக் கேட்டார். அதைக் கேட்டுவிட்டு, ‘இது சூப்பராக இருக்கிறது’ என்று பாராட்டினார்.

அந்தப் பாராட்டிலிருந்து வெளியே வர எனக்கு ஆறு மாதங்கள் ஆகின. அந்த ஜாம்பவானுடன் பணியாற்றுவேன் என்று நான் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை. ரஹ்மான் சார் கொடுத்த ஊக்கத்தையும், அந்த நாள்களையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது” என்றார் நெகிழ்ச்சியுடன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"விஜய்யின் 'குட்டி ஸ்டோரி'கள் பல ஆழமான புரிதலை தந்தன!" - சிபி சத்யராஜ் |"Vijay's 'Kutti Stories' offered many profound insights!" – Sibi Sathyaraj

📌 “விஜய்யின் ‘குட்டி ஸ்டோரி’கள் பல ஆழமான புரிதலை தந்தன!” – சிபி சத்யராஜ் |”Vijay’s ‘Kutti Stories’ offered many profound insights!” – Sibi Sathyaraj

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ உங்களுக்குப் போட்டியாக இருக்கும் மற்ற பெரிய நடிகர்களின் ரசிகர்களான எனது நண்பர்களிடம், உங்களுக்காக…

"பூரி ஜெகன்நாத்தின் பயணம் அவ்வளவு அற்புதமானது!" - விஜய் சேதுபதி |"Puri Jagannadh's journey is truly wonderful!" — Vijay Sethupathi

🚀 “பூரி ஜெகன்நாத்தின் பயணம் அவ்வளவு அற்புதமானது!” – விஜய் சேதுபதி |”Puri Jagannadh’s journey is truly wonderful!” — Vijay Sethupathi

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ அந்தப் பதிவில் விஜய் சேதுபதி, "இந்த மனிதரின் பயணம் அவ்வளவு அற்புதமானது ✅…