அவர், “முதலில் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஒப்பந்தமாகி இருந்தார் என்பதே எனக்குத் தெரியாது. திடீரென்று திங்க் மியூசிக் குழுவிலிருந்து எனக்கு வழிகாட்டியாக இருக்கும் சந்தோஷ் தொடர்புகொண்டு சூர்யா சார் படத்திற்கு இசையமைக்கப் போகிறேன் என்றார்கள்.
இந்தச் செய்தியை அவர்கள் சொன்னதும் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகுதான் ஆரம்பகால போஸ்டர்களில் ரஹ்மான் சாரின் பெயர் இருந்ததைப் பார்த்தேன்.
என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் தயாரிப்பாளர்களும், சூர்யா சாரும் என்னை விரும்பும்போது, அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பது என் கடமை. நான் ரஹ்மான் சாரிடம் இது குறித்துப் பேசினேன். அவருக்கு இதில் எந்தத் தயக்கமும் இல்லை.

அவர் மற்றவர்களை ஊக்குவிப்பதில் ஒருபோதும் தயங்கியதில்லை. நூறு பிரச்னைகள் இருந்தாலும் அவர் மிகவும் அமைதியாக இருப்பார். அது எனக்குப் பெரிய உத்வேகத்தைத் தருகிறது” என்றவர், ‘பத்து தல’ படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அவர், “சிலம்பரசன் நடித்த ‘பத்து தல’ படத்தில் நான் பணியாற்றிய போது, ரஹ்மான் சார் திடீரென அறைக்குள் வந்து நான் உருவாக்கிய இசையைக் கேட்டார். அதைக் கேட்டுவிட்டு, ‘இது சூப்பராக இருக்கிறது’ என்று பாராட்டினார்.
அந்தப் பாராட்டிலிருந்து வெளியே வர எனக்கு ஆறு மாதங்கள் ஆகின. அந்த ஜாம்பவானுடன் பணியாற்றுவேன் என்று நான் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை. ரஹ்மான் சார் கொடுத்த ஊக்கத்தையும், அந்த நாள்களையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது” என்றார் நெகிழ்ச்சியுடன்.




