விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த வெப் சீரிஸ் “முத்து என்கிற காட்டான்’.
இந்த வெப் சீரிஸை இயங்குநர் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இருவரும் இயக்கி இருந்தனர். மக்களிடையே இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த வெற்றியை ‘முத்து என்கிற காட்டான்’ குழுவினர் ஒன்றிணைந்து கொண்டாடி இருக்கின்றனர்.

இந்தக் கொண்டாட்ட விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ” இந்த படைப்பில் உழைத்த அத்தனை பேரும் முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள்.
கதை நம் வாழ்க்கையோடு நெருக்கமாகவும் இருந்தது. அதனால் அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது.
வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன் ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
