அந்தப் பேட்டியில் அவர், “தமிழ் புத்தாண்டு எங்களுக்கு ஒரு புதிய தொடக்கம். என் பெற்றோர் தமிழ் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவே கடவுள் சிலையை வைத்து அலங்கரிப்பார்கள்.
மறுநாள் காலை அதைப் பார்த்துதான் நாங்கள் விழிப்போம். என் கணவர் ரோஷனுடன் நான் கொண்டாடும் முதல் தமிழ் புத்தாண்டு என்பதால், எங்கள் கொண்டாட்டத்தில் இதையும் சேர்த்துக் கொள்ளப் போகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இருவரின் பாரம்பரியத்தையும் நாங்கள் பின்பற்றுவோம்.
நாங்கள் கணவன் – மனைவி என்பது இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது. எனக்கு அவர் எப்போதும் சிறந்த நண்பர்தான். திருமணமான புதிதில் வரும் பொறுப்புகளை உணர்ந்து அவற்றை ரசித்து வருகிறோம்.
திருமணத்தன்று தாலி கட்டும் நேரத்தில் ரோஷன் கண்கலங்கிவிட்டார். அவர் அழுதால் நானும் அழத் தொடங்கிவிடுவேன் என்பதால், அவரை அழ வேண்டாம் என்று அப்போது அவரிடம் சொன்னேன்.
தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு அடுத்தடுத்து வருவதால் இது எங்களுக்கு இரட்டைக் கொண்டாட்டம்.” எனக் கூறியிருக்கிறார்.




