[ad_1]
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் “லீடர்’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.
ஷ்யாம், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
நடிகர் ஷ்யாம் பேசுகையில், “கருடன் படத்தைப் பார்த்த பிறகு என் நண்பர்களிடம், இயக்குநர் துரை செந்தில்குமார் டைரக்ட் செய்யும் படத்தில் நடிக்க வேண்டும் என்றேன்.
அந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் சரியாகக் கையாண்டிருக்கிறார் என்றேன். இதைச் சொன்ன சில நாள்களில் இயக்குநர் துரை செந்தில்குமாரிடமிருந்து அழைப்பு வந்தது, பிறகு சந்திப்பு நடந்தது.
அவரிடம் நான் கதையைக் கேட்கவில்லை, ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பொறுப்புள்ள இயக்குநரவர்.
[ad_2]
Source link




