என்னுடைய தாய் மொழி தெலுங்காக இருந்தும் நான் தமிழ் இத்தனை அழகாகப் பேசுகிறேன் என்பது வேண்டுமானால் எனக்கு பெருமையாக இருக்கலாம். இவ்வளவு அழகாக தமிழ் பேசுபவர் சாதி பெருமையைப் பேசுகிறார் எனச் சொல்லும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
அதன் பின்னணியில் ஏதோ காரணம் இருப்பதாகச் சொல்லும்போது எனக்கு அவமானமாகவும் இருக்கிறது. அன்று, மேடையில் தெலுங்கில் பேசும்போது சரியாகப் பேச வேண்டும் எனப் பதற்றத்தில் இருந்தேன்.
அதனை பேப்பரிலும் எழுதிக் கொண்டு போனேன். பின்னிருந்து ஒருவர் சொன்னதைக் கேட்டு, பதற்றத்துடன் மேடையில் அந்த வார்த்தையை இரண்டு முறை சொல்லிவிட்டேன்.
அது இவ்வளவு பெரிய எதிர்வினையை ஏற்படுத்தும்போது என நினைக்கவில்லை. எனக்குள் அது உறுத்திக் கொண்டே இருந்தது. ஏனென்றால், நான் அப்படி கிடையாது.
சாதி இல்லை எனச் சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். சாதி, மதம் இல்லை என்பது என்னுடைய விருப்பமாக இருக்கும்போது, அதை ஏன் சான்றிதழ்களில் மாற்றக் கூடாது என யோசித்தேன். அப்போதிருந்து முயற்சி செய்து, முறையாக இப்போது விண்ணப்பித்திருக்கிறேன்.
ஜி.ஓ கிடைத்தால், முதன் முதலில் திரையுலகில் சாதி மதம் அற்றவன் என்கிற சான்றிதழை வாங்குகிறேன் என்பது எனக்கு பெருமை. சாதி இல்லை எனச் சொல்வதுதான் எனக்கு பெருமை. நான் இந்தச் சாதியைச் சார்ந்தவன் எனச் சொல்வதில் எனக்கு பெருமை இல்லை” எனக் கூறியிருக்கிறார்.
