மேடையில் நடிகர் தனுஷ் பேசுகையில், “என் திரைப்பயணத்தில் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. ஆனால் சிறந்த இயக்குநர்கள் என்னைத் தேடி வந்து வாய்ப்பளித்தனர்” என்றவர், “கர’ படத்தின் தலைப்பு குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.
அவர், “முன்பு ‘வேலையில்லா பட்டதாரி’, ‘திருச்சிற்றம்பலம்’ படங்களுக்கும் இதே போன்ற விமர்சனங்கள் வந்தன. ஆனால் அவை பெரிய வெற்றி பெற்றன” என்றார்.

மேலும், தனது போயஸ் கார்டன் வீடு குறித்த மீம்களுக்கு, “இதனை ஒரு பொழுதுபோக்காகவே பார்க்க வேண்டும். மக்களை மகிழ்விப்பதே தனது வேலை என்பதால் இதனை நேர்மறையாக எடுத்துக்கொள்கிறேன். ஒருமுறை விமான நிலைய ஊழியர் ஒருவர் என்னிடம் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காகக் கேட்டார்.
அப்போது அவர் ‘நான் யாரிடமும் புகைப்படம் கேட்க மாட்டேன். ஆனால், போயஸ் கார்டன் வீடு பற்றி நீங்கள் பேசிய விஷயம் என்னுடைய மகனுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது’ எனக் கூறினார்.
அதனால், அதனை மோட்டிவேஷனாகப் பார்த்தால் மோட்டிவேஷன், என்டர்டெயின்மெண்டாகப் பார்த்தால் என்டர்டெயின்மெண்ட். எதனை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது” என்றார்.




