`வேட்டையன்” திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தவிர ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

பலரும் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் ரஜினிகாந்த்தின் 50 ஆண்டுக்கால சினிமா பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.