அதனால என்னுடைய அடுத்த 5 படத்தை என்னுடைய நிறுவனத்துலதான் பண்ணணும், வேற இடத்துல பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.
நான் பெரிதும் அட்மைர் பண்ற நடிகர்களும் என்னுடைய படம் ரிலீஸ் சமயத்துல எனக்கு கால் பண்ணி விஷ் பண்ணவே இல்ல. அந்தப் படம் நல்லா போனதுக்குப் பிறகு என்னுடைய டைரக்டர்கிட்ட பேசிடுவாங்க.
ஆனா, எனக்கு கால் வராது. நான் இப்போ சமீபத்துல ரெண்டு படம் பார்த்தேன். அந்தப் படம் எனக்கு பிடிச்சிருந்தது நான் அந்த டீம் கிட்ட பேசினேன்.
அதுபோல, என்னுடைய படம் வரும்போது யாரும் வாழ்த்தினால் எனக்குள்ள சந்தோஷம் ஏற்படுமே, அது எனக்கு நடந்ததே கிடையாது.” என்றார்.
இதைத் தொடர்ந்து ஆமீர் கான் கூலி’ திரைப்படம் தொடர்பாக பேசியது குறித்து விஷ்ணு விஷால், “ ‘கூலி’ படத்தில் நடித்தது தவறு என அமீர் கான் சார் பேசினார் என பரவிய செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்களை அவருக்கே அனுப்பி கேட்டேன்.
அவர் அப்படியெல்லாம் கூறவில்லை என உடனே ஒரு அறிக்கை வெளியிட்டார். ரஜினிகாந்த் சார் மீதிருந்த அன்பின் காரணமாக வந்து கூலி’ படத்தில் நடித்திருக்கிறார்.
அந்தக் காட்சியில் நடித்தது என்பது அவருக்கு சந்தோஷமான ஒன்றுதான். அவருக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை.” எனக் கூறினார்.