ஒரு வருடம் ஓடிய ராமராஜனின் ‘கரகாட்டக்காரன்’! | actor Ramarajan s Karakattakaran ran for a year

ஒரு வருடம் ஓடிய ராமராஜனின் ‘கரகாட்டக்காரன்’! | actor Ramarajan s Karakattakaran ran for a year


தமிழ் சினி​மா​வில் 80-களின் இறு​தி​யிலும் 90-களி​லும் டாப் ஹீரோ​வாக இருந்​தவர் ராம​ராஜன். ரஜினி, கமல் படங்​களுக்கே கடும் சவாலாக இருந்தன அவர், படங்​கள். கிராமத்து பேக்​ர​வுன்ட், காதல், மோதல், குடும்ப சென்​டிமென்ட், அற்​புத​மான பாடல்​கள்​… இது​தான் ராம​ராஜன் பட ஃபார்​முலா. இந்த அடிப்​படை​யில் வெளி​யான அவரின் பல படங்​கள் வெற்றி பெற்​றிருக்​கின்​றன. அதில் ஒன்​று, மக்​களைக் கொண்​டாட வைத்த, ‘கர​காட்​டக்காரன்’. மதுரை நடனா தியேட்​டரில் ஒரு வருடத்​துக்​கும் மேல் ஓடிய இந்​தப் படம் சில பகு​தி​களில் தொடர்ந்து ஹவுஸ்-புல் காட்​சிகளாக, 200 நாட்​களுக்கு மேல் ஓடியது.

கங்கை அமரன் இயக்​கிய இந்​தப் படத்​தில் முத்​தையா என்ற கரகாட்​டக் கலைஞ​ராக, ரசிகர்​களின் மனதை அள்​ளி​யிருப்​பார் ராம​ராஜன். இதில்​தான், கனகா நாயகி​யாக அறி​முக​மா​னார். அவருக்​கும் காமாட்சி என்ற கரகாட்​டக்​காரி வேடம்​தான். கூடவே அத்தை மகனைக் காதலித்து சோகம் சுமக்​கும் கதா​பாத்​திரம். கவுண்​டமணி தவில், நாதஸ் செந்​தில், ஊர் பெரிய மனிதர் சின்​ன​ராசு​வாக சந்​தான​பார​தி, கனகா​வின் தந்​தை​யாக சண்​முகசுந்​தரம், ராம​ராஜனின் அம்​மா​வாக காந்​தி​ம​தி, சந்​திரசேகர், கோவை சரளா ஆகியோர் நடித்​திருந்​தனர்.

கதை ரொம்ப சிம்​பிள். ‘தில்​லானா மோக​னாம்​பாளி’ன் இன்​னொரு வடிவம். அதில் நடனக் கலைஞ​ரான பத்​மினியை காதலிப்​பார் நாதஸ்வர வித்​வான் சிவாஜி கணேசன். இதில் இரண்டு கரகாட்​டக் கலைஞர்​கள் காதலிக்​கிறார்​கள். ஊர் மற்​றும் குடும்​பப் பிரச்​சினை​களை மீறி அவர்​கள் எப்​படி ஒன்று சேர்​கிறார்​கள் என்​பது படம்.

‘தில்​லானா மோக​னாம்​பாள்’ கதை​யின் இன்​ஸ்​பிரேஷன்​தான் இந்​தப் படத்​துக்கு காரணம் என்​ப​தைக் கங்கை அமரனே வெளிப்​படை​யாகச் சொல்லி இருக்​கிறார். இந்​தப் படத்​தில் கவுண்​டமணி – செந்​தி​லுக்​கான காமெடி காட்​சிகள் வரவேற்​பைப் பெற்​றன. குறிப்​பாக அந்த வாழைப்பழ காமெடி ‘கன்னா பின்​னா’ ஹிட். இது ஒரு மலை​யாளப் படத்​திலிருந்து சுட்​டது என்​கிறார்​கள்.

‘இந்​தி​யா​விலேயே, நம்ம வேல்​டுலயே கார் வச்​சிருக்​கிற கரகாட்ட கோஷ்டி நம்ம கோஷ்டி​தான்’, செந்​திலை அடிக்​கடி அடித்​து​விட்​டு, “அதை ஏன்ட்டா என்ன பார்த்து அப்​படி ஒரு கேள்வி கேட்​டே” என்று கவுன்​டர் அடிக்​கிற கவுண்​டரின் நடிப்​பும் அந்த கேள்விக்​கான பதில் பார்​வை​யாளர்​களுக்​குத் தெரி​யும்​போது வரு​கிற குபீர் சிரிப்​பும் படத்​தின் பிளஸ். திரு​விழா​வில் காணா​மல் போன குழந்தை போலவே பம்மி நிற்​கும் செந்​திலின் நடிப்​பும் அவர்​களுக்​கேற்ற ஜோடி​யாக கோவை சரளா​வின் எக்​ஸ்​பிரஷனும் இந்​தப் படத்​தின் ஹிட்​டுக்​கான காரணங்​களில் ஒன்​றாக அமைந்​தன.

படத்​தின் வெற்​றிக்கு இன்​னொரு காரண​மாக அமைந்​தது, இளையாராஜா​வின் மனதை மயக்​கிய பாடல்​கள். ‘இந்த மான் உந்​தன் சொந்த மான்’ மற்​றும் ‘மாங்​கு​யிலே பூங்​கு​யிலே’ என்று மெலடி​யில் இழைந்​து, ‘குடகு மலை காற்​றில் வரும் பாட்​டுக் கேட்​கு​தா’ என சோகத்​தில் கரைந்​து, ‘மாரி​யம்​மா.. மாரி​யம்​மா…’, ‘முந்தி முந்தி வினாயகரே’, ‘ஊரு விட்டு ஊரு வந்​து’ என துள்​ளலிசைப் பாடல்​களை தந்த இளை​ய​ராஜா, டைட்​டிலில் ‘பாட்​டாலே புத்தி சொன்​னான்’ என்று தனது குரலில் ஆரம்​பிக்​கும் போதே படத்தின் மீது ஈர்ப்பு வந்​து​விடும் நமக்​கு. இந்த ஒரு பாடலை தவிர மற்ற பாடல்​களை கங்கை அமரன் எழுதி​னார். டைட்​டில் பாடலில், படத்​தில் பணிபுரிந்த அனைவரை​யும் அறி​முகப்​படுத்தி இருந்​தார் கங்கை அமரன்.

இந்​தப் படத்​தில் கவுண்​டமணி பயன்​படுத்​தும் 1960-ம் ஆண்டு மாடலான செவர்லே இம்​பாலா கார், பட ரிலீஸுக்கு பிறகு அதி​கம் பிரபல​மானது. விஜயா மூவிஸ் சார்​பில் கரு​மாரி கந்​த​சாமி​யும் ஜே துரை​யும் தயாரித்​தனர். ஏ.ச​பாபதி ஒளிப்​ப​திவு செய்​தார். வெறும் 28 நாட்​களில் முடிக்​கப்​பட்ட படம் இது. 1989-ம் ஆண்டு இதே நாளில் வெளி​யான இந்த சூப்​பர்​ ஹிட்​ படம்​, ‘கர​காட்​ட கோபை​யா’ என்​ற பெயரில்​ டப்​ செய்​யப்​பட்​டு தெலுங்​கிலும்​ வெளி​யானது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1365761' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *