சிரஞ்சீவிக்கு நாயகியாக நடிக்கவிருப்பதாக வெளியான செய்திக்கு மாளவிகா மோகனன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாபி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிரஞ்சீவி. கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இது இணையத்தில் வைரலானது.
இச்செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மாளவிகா மோகனன். இது தொடர்பாக. “வணக்கம் நண்பர்களே, பாபி சார் இயக்கவுள்ள ‘மெகா158’ படத்தில் நான் நடிக்கவிருப்பதாக இணையத்தில் நிறைய செய்திகள் பரவி வருகின்றன. நாயகியாக பிரபல நடிகர் சிரஞ்சீவி சாருடன் நடிக்க விரும்புகிறேன். ஆனால், இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்பதையும், இந்தச் செய்திகள் தவறானவை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி உடன் இப்படத்தில் கார்த்தி நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் பரவியுள்ளன. இதற்கு படக்குழுவினர் மற்றும் கார்த்தி தரப்பில் இருந்து எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. அனில் ரவிப்புடி படத்தினை முடித்துவிட்டு, பாபி இயக்கவுள்ள படத்துக்கு தான் தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிரஞ்சீவி.
Hi guys
So there are a lot of reports circulating online that I’m a part of Mega 158 helmed by Bobby sir.
While I would love to share the screen with the iconic Chiranjeevi sir at some point in my career, but just wanted to clarify that I’m not a part of this project and the…
— Malavika Mohanan (@MalavikaM_) October 29, 2025

