சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
நாடு முழுவதும் சூதாட்ட செயலிகளால் பணத்தை இழந்து, பலர் சிக்கலில் தவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாகச் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

இதனால் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்வதையும், ஊக்கப்படுத்துவதையும் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் விவகாரங்கள் துறை உத்தரவிட்டு இருந்தது.