பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் டியூட்” திரைப்படம் திரையரங்குகளில் பாராட்டுகளையும், வசூலையும் அள்ளி வருகிறது.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் ஆணவக் கொலைக்கு எதிராக இந்த ராம் – காம் ஜானர் படத்தில் அழுத்தமாக பேசியிருக்கிறார்.
`டியூட்’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு சினிமா விகடன் சேனலுக்காக இயக்குநர் கீர்த்தீஸ்வரனை சந்தித்துப் பேட்டிக் கண்டோம்.
* டியூட்’ படத்தின் கதையை எழுதும்போது முதலில் படத்திற்கு சலோமியா’ என்றுதான் தலைப்பிட்டிருந்தேன். நண்பர்கள் குறித்தான கதை என்பதால் அந்தத் தலைப்பை யோசித்திருந்தேன். அதை வொர்கிங் டைட்டிலாகதான் வைத்திருந்தேன். ஆனால், `டியூட்’ என்கிற தலைப்பு அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருந்தது.

