"தனுஷ் காப்புரிமைக்கு பணம் வேண்டாம் என்றார்; பொருளாதார நெருக்கடியின்போதும்..." - வெற்றி மாறன்|Dhanush |Copyright Issue | Vetrimaaran

“தனுஷ் காப்புரிமைக்கு பணம் வேண்டாம் என்றார்; பொருளாதார நெருக்கடியின்போதும்…” – வெற்றி மாறன்|Dhanush |Copyright Issue | Vetrimaaran


அது குறித்து வெற்றிமாறன் பேசும்போது, “தனுஷ்தான் ‘வடசென்னை’ படத்தின் தயாரிப்பாளர். அப்படத்தின் இரண்டாம் பாகமோ அல்லது ஸ்பின்-ஆஃபோ எடுத்தால், அதன் காப்புரிமையைப் பெற வேண்டும்.

ஒருவர் காப்புரிமைக்காகப் பணம் கேட்பது சரியானதுதான். அதை எதிர்மறையான விஷயமாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான் சிம்புவைச் சந்தித்த மறுநாளே தனுஷிடம் பேசினேன்.

அவரிடம், ‘இந்தப் படத்தை ‘வடசென்னை’ கதாபாத்திரங்களுடன் இணைத்தும் எடுக்க முடியும், தனியாகவும் இதைப் படமாக உருவாக்க முடியும்.

தனுஷ் - வெற்றி மாறன்

தனுஷ் – வெற்றி மாறன்

‘வடசென்னை’ படத்தின் காப்புரிமை உங்களிடம்தான் இருக்கிறது,’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘உங்களுடைய எண்ணத்திற்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்யுங்கள். நான் என் குழுவிடம் பேசி காப்புரிமையைத் தந்துவிடுகிறேன். அதற்கு எனக்கு பணம் எதுவும் வேண்டாம்,’ என்று கூறிவிட்டார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *