தமிழ் கலாச்சாரம் சார்ந்த படங்கள் அதிகம் வரணும்! - எழுத்தாளர் பெருமாள் முருகன் நேர்காணல் | Writer Perumal Murugan interview

தமிழ் கலாச்சாரம் சார்ந்த படங்கள் அதிகம் வரணும்! – எழுத்தாளர் பெருமாள் முருகன் நேர்காணல் | Writer Perumal Murugan interview


எழுத்​தாளர் பெரு​மாள் முரு​க​னின் ‘கோடித் துணி’ சிறுகதை, ‘அங்​கம்​மாள்’ என்ற பெயரில் திரைப்​பட​மாகி இருக்​கிறது. இதில் கீதா கைலாசம் ‘அங்​கம்​மாளாக’ நடித்​திருக்​கிறார். சரண் சக்​தி, பரணி, முல்​லை​யரசி, தென்​றல் உள்பட பலர் நடித்​துள்ள இப்​படத்தை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கி இருக்​கிறார். அடுத்த மாதம் வெளி​யாக இருக்​கும் இப்​படம் பற்றி பெரு​மாள் முரு​க​னிடம் பேசினோம்.

உங்​களோட ‘கோடித்​துணி’ கதை எப்​படி ‘அங்​கம்​மாள்’ ஆச்​சு?

இந்​தக் கதை ஆங்​கிலம் மற்​றும் மலை​யாளத்​துல மொழி பெயர்ப்​பாகி இருக்​கிறது. இரண்​டை​யும் வாசிச்​சிருக்​கார், இயக்​குநர் விபின் ராதாகிருஷ்ணன். பிறகு என்​னைத் தொடர்பு கொண்​டார். ‘இந்​தக் கதையை படமா பண்​ணப்​போறேன், அனு​மதி வேணும்​’னு கேட்​டார். இது​மா​திரி நிறைய பேர் கேட்​பாங்க. ஆனா, ஒண்ணும் நடக்​காது. இவரை​யும் அப்​படித்​தான்னு நினைச்​சேன். பிறகு முறையா அனு​மதி வாங்​கி​னார். அவர் கேரளாவைச் சேர்ந்​தவர்ங்​கற​தால, மலை​யாளத்​துல எடுப்​பார்னு நினைச்​சேன். ஆனா, தமிழ்​லயே எடுத்​திட்​டார்.

அந்​தக் கதை​யில அம்மா கேரக்​டருக்கு பெயரே இருக்​காது. அம்​மா, மகனுக்​கான பிரச்​சினை மட்​டும்​தான் கதை. அது​வும் குறை​வாகத்​தான் இருக்​கும். திரைப்​படத்​துக்கு இன்​னும் வேணுமே… நீங்க ஏதும் மாத்தி எழு​திக் கொடுத்​தீங்​களா?

என் கதை​யில அம்மா கேரக்​டருக்கு பெயர் வைக்​கல. படத்​துக்​காக ‘அங்​கம்​மாள்​’னு வச்​சிருக்​காங்க. அப்​புறம் ஒரு சிறுகதையை படமாக்​கும்​போது அதுக்கு நிறைய விஷ​யங்​கள் சேர்க்​கணும். சினி​மாவுக்கு ஒரு குறு​நாவல் அளவுக்​காவது கதை வேணும். இந்​தக் கதை​யில அவங்க சில விஷ​யங்​களை மாற்​றப் போறோம்னு சொன்​னாங்க. கதையை கொடுத்​துட்ட பிறகு அது அவங்க விருப்​பம்​தான். அதனால, அம்மா கதா​பாத்​திரத்தை விரி​வாக்​கி, அம்​மா- மகனுக்​கான உறவை இன்​னும் ஆழமா சொல்​லி​யிருக்​காங்க. ஒரு காதலை​யும் சேர்த்​திருக்​காங்க. கதை களத்தை திருநெல்​வேலி பக்​கமா மாத்​திட்​டாங்க. நான் எழு​திய கொங்கு பகுதி விஷ​யங்​கள், படத்​துல திருநெல்​வேலி பேச்சு வழக்​குல வரும்.

உங்​களோட ‘கூள​மா​தாரி’ நாவலும் திரைப்​பட​மாகு​தே…

அறி​முக இயக்​குநர் ராஜ்கு​மார் இயக்​கி​யிருக்​கார். படப்​பிடிப்பு முடிஞ்​சிடுச்​சு. எனக்கு ஆச்​சரி​யம்​தான். அந்த நாவல்ல அவ்​வளவு ஆடு​கள் வரும். களமே பெரிசு. அவ்​வளவு நுட்​ப​மான விஷ​யங்​கள் இருக்​கு. அதை புரிஞ்​சுகிட்டு இவரால எப்​படி எடுக்க முடி​யும்னு எனக்கு தோணுச்​சு. ஆனா, அவர் முதல்ல ‘பைலட்’ எடுத்​துட்டு வந்து காண்​பிச்​சதும் எனக்கு நம்​பிக்கை வந்​துச்​சு. இவர் கண்​டிப்பா பிரம்​மாண்​டமா இந்​தப் படத்தை இயக்​கு​வார்னு நம்​பினேன். ஸ்கிரிப்ட் காண்​பிச்​சார். நல்லா எழு​தி​யிருந்​தார். சிறப்​பான படமா இருக்​கும்னு நினைக்கிறேன்.

17614465511138 Thedalweb தமிழ் கலாச்சாரம் சார்ந்த படங்கள் அதிகம் வரணும்! - எழுத்தாளர் பெருமாள் முருகன் நேர்காணல் | Writer Perumal Murugan interview
`அங்கம்மாள்’ கீதா கைலாசம்

எழுத்​தாளர் பூமணி எப்​பவோ எழு​திய ‘வெக்​கை’, சில வருடங்​கள் முன்​னால, ‘அசுரன்’ ஆகி​யிருக்​கு. உங்க ‘கோடித்​துணி’ கூட 1997-ல வெளி​யான கதை. பழைய கதைகள், நாவல்​களைத் தேடி பிடிச்சு சினி​மாவாக்​குற போக்கு இப்ப அதி​கரிச்​சிருக்​கு…

ஆமா. தமிழ் சினி​மாவுல இப்ப வரும் இளைஞர்​கள், இலக்​கி​யம் படிக்​கிறவங்​களா இருக்​காங்க. அதனால தங்​களுக்​குப் பிடிச்ச கதையை சினி​மா​வாக்க ஆர்​வம் காட்​டுறாங்க. அது​மட்​டுமில்​லாம, இன்​னைக்கு புதுசா படம் இயக்க நினைக்​கிற இயக்​குநர், ஹீரோக்​கள்​கிட்ட கால்​ஷீட் வாங்​குறது எளி​தான விஷய​மாக​வும் இல்ல. அதனால தங்​களை நிரூபிக்​கறதுக்கு நல்ல கதைகளை படமாக்க நினைக்​கிறாங்க. நாவல்​களை, சிறுகதைகளை படமாக்க, குறை​வான பட்​ஜெட் போது​மானதா இருக்​கற​தால அதை தேடுறாங்​கன்னு நினைக்​கிறேன்.

உங்​களோட சேத்​து​மான், கோடித்​துணி சிறுகதைகளும், பூக்​குழி, கூள​மா​தாரி நாவல்​களும் படமாகி​யிருக்​கு… அடுத்​து?

‘சேத்​து​மான்’ படத்தை இயக்​கிய தமிழ், ‘பூக்​குழி’ நாவலை படமாக்கி இருக்​கார். தர்​ஷன், தர்​ஷணா நடிச்​சிருக்​காங்க. படப்​பிடிப்பு முடிஞ்​சிருச்​சு. எந்​தப் படைப்பை எழுதும்​போதும்அது சினி​மா​வாகும்னு நினைச்சு எழுதற​தில்​லை. எழு​திய பிறகு​தான் அப்​படி கேட்டு வந்​திருக்​காங்க. என் முதல் நாவலான ‘ஏறு​வெ​யில்’ வந்​ததும் அதைப் படிச்​சுட்டு 1992-ல்பாலுமகேந்​திரா கூப்​பிட்டு படமா பண்​ணப் போறேன்னு பேசி​னார். அப்​புறம் பண்​ணல. புதுசா வர்​றவங்க நிறைய பேர், என் கதைகளை படிச்​சுட்டு படம் பண்ண கேட்​கிறாங்க.

சமீப​கால திரைப்​படங்​களை கவனிக்​கிறீங்​களா?

அப்​பப்ப பார்ப்​பேன். நல்ல படங்​களும் வந்​துட்​டு​தானே இருக்​குது. திரைப்​படங்​கள்ல அதிக வன்​முறை​கள் பற்றி கேட்​கிறாங்க. ஹீரோ​யிச மாஸ் படங்​கள்​னாலே வன்​முறைகள்​தானே இருக்​கு. அதை எப்​படி மக்​கள் ரசிக்​கிறாங்​கன்னு எனக்​குத் தெரியல. தமிழ் சினி​மாவுல என்ன ட்ரெண்ட் வந்​தா​லும் வன்​முறை டிரெண்ட் மாறவே இல்​லை. அது தொடர்ந்​துகிட்​டு​தான் இருக்​கு. இதுக்கு மத்​தி​யில நல்ல படங்​களும் வருவது மாற்​றம்​தான். மலை​யாளத்​துல அவங்க கலாச்​சா​ரம் சார்ந்து நிறைய படங்​கள் வருது. தமிழ்ல நம் கலாச்​சா​ரம் சார்ந்த படங்​கள் அதி​கம் இல்​லை. அது வரணும். தமிழ் இலக்​கி​யம் சார்ந்து நம் நிலத்தை குறிஞ்​சி, முல்லை, மருதம், நெய்​தல்னு நானிலங்​களா பிரிக்​கிறோம். ஆனா, அந்த நில அமைப்பு திரைப்​படங்​கள்ல காண்​பிக்​கப்படலை. அந்த வாழ்​வியல், சினி​மாவுல சிறப்பா சொல்​லப்படலை. ‘கூள​மா​தாரி’ முல்லை நிலம் சார்ந்த கதை. மேய்ச்​சல் நிலம் சார்ந்​த கதை. இது​போல அந்​தந்​த நிலம்​ சார்ந்​த கதைகள்​ வரும்​போது அதை ரசிக்​கவும்​ மக்​கள்​ தயாரா இருக்காங்க.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1380962' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *