அமிதாப்பச்சன் அயோத்தியில் ஏற்கெனவே மூன்று இடங்களில் நிலம் வாங்கி இருக்கிறார். அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் முன்பாக ரூ.4.54 கோடிக்கு 5372 சதுர அடி நிலத்தை வாங்கினார்.
அதன் பிறகு சராயு நிறுவனம் மேம்படுத்திய நிலத்தில் ரூ.14.50 கோடிக்கு நிலத்தை வாங்கினார். அதோடு அயோத்தியில் 54 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் அமிதாப்பச்சன் வாங்கி இருக்கிறார். அந்த நிலத்தில் அமிதாப்பச்சன் தனது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சனுக்கு நினைவுச்சின்னம் கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அமிதாப்பச்சன் வாங்கி இருக்கும் நிலத்தையும் சராயு நிறுவனம்தான் மேம்படுத்தி விற்பனை செய்துள்ளது.
அயோத்தியில் இருந்து அமிதாப்பச்சனின் சொந்த ஊரான பிரயக்ராஜ் நகரத்திற்கு எளிதில் சென்றுவிட முடியும். எனவேதான் ஆன்மிக நகரில் தொடர்ந்து அமிதாப்பச்சன் நிலத்தில் பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறார்.
அமிதாப்பச்சன் அடுத்ததாக செக்ஷன் 84 படத்தில் நடிக்கிறார். அதோடு பிரமாஸ்தரா மற்றும் கல்கி 2898 ஏடி என்ற படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். இது தவிர கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியையும் நடத்த இருக்கிறார்.