விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த பெருமாயி காலமானார்!

விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த பெருமாயி காலமானார்!


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் பெருமாயி.

73 வயதான இவர் இயக்குநர் பாரதிராஜாவின் ‘தெற்கத்தி பொண்ணு’ சீரியல் மூலம் பிரபலமாகி, பாரதிராஜாவின் பல்வேறு படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மனம் கொத்தி பறவை’, விஜய்யின் ‘வில்லு’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 30-க்கும் மேற்பட்ட கிராமப்புறம் சார்ந்த திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக  நடிகர் பசுபதியின் ‘தண்டட்டி’ படத்தில் நடித்த இவர் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு தனது வீட்டிலேயே உயிரிழந்திருக்கிறார்.

அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதி மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்த சிலர்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *