ஷாருக் கானின் மன்னத் பங்களா புனரமைப்பில் விதி மீறலா? - வனத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு!

ஷாருக் கானின் மன்னத் பங்களா புனரமைப்பில் விதி மீறலா? – வனத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு!


ஷாருக் கானின் பங்களாவில் நடந்திருக்கும் விதிமுறை மீறல் குறித்து ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஒய்.பி சிங் கூறுகையில்,” வில்லா வியன்னா என்ற பெயரை மாற்றி விதிகளை மீறி மன்னத் என்று வைத்துள்ளனர். 2005ம் ஆண்டு மன்னத் பங்களாவிற்கு பின்புறம் இருந்த நிலத்தில் நீட்டித்து புதிய கட்டடம் கட்டிக்கொண்டனர். அந்நேரம் நில உச்ச வரம்பு சட்டம் அமலில் இருந்ததால் பெரிய அபார்ட்மெண்ட் கட்ட முடியாது. எனவே சட்ட சிக்கலில் இருந்து விடுபட ஷாருக் கானும், அவரது மனைவி கெளரி கானும் மன்னத் பங்களாவில் 12 தனி பிளாட்கள் இருப்பதாக கூறி மாநகராட்சியில் அனுமதி பெற்றுக்கொண்டனர். 12 பிளாட்களுக்கு மாநகராட்சி ஒப்புதல் கொடுத்தவுடன் ஷாருக் கான் 12 பிளாட்களையும் ஒன்றாக இணைத்து ஒரே குடும்பம் வசிக்கக்கூடிய வகையில் ஆடம்பர பங்களாவாக மாற்றி விட்டார். மாநகராட்சி அதிகாரிகளின் துணை இல்லாமல் இதை செய்திருக்க முடியாது.

இப்போது நில உச்ச வரம்பு அமலில் இல்லாவிட்டாலும் விதிகளை மீறி 12 பிளாட்களை ஒன்றாக இணைத்துள்ளனர்” என்று தெரிவித்தார். இதனால் ஷாருக் கானுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஷாருக் கான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் 24 லட்சம் வாடகை கொடுத்து வருகிறார். மன்னத் பங்களாவின் புனரமைப்பு பணிகள் முடிய 3 ஆண்டுகளுக்கும் மேல் பிடிக்கும் என்பதால் ஷாருக் கான் வாடகை விட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து எடுத்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு ஷாருக் கான் மொத்தம் 8.7 கோடி வாடகையாக கொடுக்க இருக்கிறார். ஷாருக் கான் தற்போது வாடகைக்கு எடுத்து இருக்கும் வீட்டின் அளவு 10,500 சதுர அடியாகும். அதாவது மன்னத் பங்களாவில் பாதியாகும்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *