இப்போது 15 வருஷம் கழித்து, அண்ணன் தயாரிப்பாளராக உட்கார்ந்திருக்கிறார். நான் நடிகராக மேடையில் நிற்கிறேன். எனக்கு சினிமாதான் முதல் நண்பன். ஆசையோடு பயணத்தைத் தொடங்கும்போது, எனக்கு முருகதாஸ் சாரிடம் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
அவரிடம் 1.5 வருடங்கள் வேலை பார்த்தேன். பிறகு, டைரக்ஷனில் பல விஷயங்கள் இருப்பதைத் தெரிந்துகொண்டு, இன்னும் கற்க விரும்பினேன். அப்படியான நேரத்தில், அண்ணன் அவருடைய அனுபவத்தில் ஒரு விஷயத்தைச் சொன்னார்.

அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் கொஞ்ச நாள் வேலை பார்த்து, தயாரிப்புத் தரப்பு வேலைகளைக் கற்கச் சொன்னார். அங்கு இருந்த சமயத்தில், இந்தப் படத்தின் கதை வந்தது.
இந்தப் படம் பண்ணிய 2 வருடங்களில் பல கடினங்களையும் சந்தித்தேன். அப்பாவும் பல கஷ்டங்களைச் சந்தித்திருக்கிறார். அண்ணனும் கஷ்டங்களைச் சந்தித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று சொன்னால், அதற்கு காரணம் இயக்குநர் கிருஷ்ணாதான். அவ்வளவு பொறுமையான மனிதர். நான் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்வார்,” எனப் பேசினார்.