எங்களைப் பொறுத்தவரையில் ‘சுறா’ வெற்றிப் படம்தான். விஜய் சாருக்கும் அப்படித்தான். படம் ரிலீஸானப்போக்கூட ‘சூப்பரா இருக்கு’ன்னு சொல்லிப் பாராட்டினார்.
விஜய் சார் ரொம்ப டீசண்ட் பர்சன். இதுவரைக்கும் ‘சுறா’ ஏன் எதிர்பார்த்த வெற்றியைக் குவிக்கலைன்னு என்கிட்டே, ஒரு வார்த்தைக்கூட கேட்டது கிடையாது. படம் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
அதுவும், படத்துக்காக கடினமா உழைச்சார். முக்கியமா, வில்லன்கள் வலையில் கட்டி விஜய் சாரை கடலில் தூக்கிப்போடும் காட்சிகள் எல்லாம் ஒரிஜினலாகவே எடுத்தோம்.
டூப் போடாம, பயமில்லாம நடிச்சுக்கொடுத்தார். இப்படி, தமன்னா, வடிவேலு சார்ன்னு மொத்த டீமுமே பெரும் உழைப்பைப் போட்டோம். ஆனா, தோல்வி படம் போன்ற பிம்பத்தை ஏற்படுத்திட்டாங்க.
‘சுறா’ தோல்விப்படமா இருந்தா ஏன் சன்டியில் வாரம்தோறும் போடணும்? ஒவ்வொரு முறையும் போடும்போது ரசிகர்கள் புதுப்படம் மாதிரிதானே பார்க்கிறாங்க. அப்போ, எப்படி அது தோல்வி படமாகும்?” என்று ஆவேசத்துடன் கேள்வியெழுப்புபவரிடம், “விஜய்யின் ‘கில்லி’, ‘சச்சின்’ போன்ற படங்கள் ரீ-ரிலீஸில் கலக்கிக்கொண்டிருக்கும்போது ‘சுறா’வை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டம் இருக்கிறதா?” என்றோம்.
“சுறா படத்தை ரீ-ரிலீஸ் பண்ணணும்ங்கிற மாதிரியான எந்த எண்ணமும் கிடையாது. அது தயாரிப்பாளர் முடிவு. ஆனா, ரீ-ரிலீஸ் பண்ணினா நிச்சயம் நல்லா போகும்ங்கிற நம்பிக்கை இருக்கு.
ஏன்னா, 15 வருடத்துக்கு முன்னாடி இருந்த ஆடியன்ஸ் வேற. இப்போ இருக்க சூழல் வேற. ரசிகர்களின் ரசனையும் மாறியிருக்கு” என்கிறார் நம்பிக்கையோடு.