அப்படி பலமுறை அவங்களோட சேர்ந்து வீடு தேடி அலைந்திருக்கிறேன். ‘பரியேறும் பெருமாள்’ படம் ரிலீஸானதுக்கு அப்புறம்கூட சேலத்துல வீடு தேடி அலைஞ்சிருக்கேன். சென்னை வந்ததுக்கு அப்றம்கூட வீடு தேடி அலைஞ்சிருக்கோம்.

எனக்கு சொந்த வீடு பற்றிய கவலையே இல்லை. ஆனால், என் மனைவி, ‘சொந்த வீடு இல்லை, சொந்த வீடு இல்லை’ என அடிக்கடி வருத்தப்படுவாங்க.
எனக்கு சமூகத்தைப் பற்றியக் கனவுதான். அவங்களுக்குச் சொந்த வீட்டைப் பற்றிதான் கனவு. ‘கர்ணன்’ படம் முடிச்சிட்டு ஒரு சொந்த வீடு வாங்கினோம்.
‘3BHK’ படம் பார்த்துட்டு என் மனைவி ரொம்ப அழுதாங்க. ‘இந்தப் படத்துல அப்பா, அம்மா இருக்காங்க. எனக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும் வச்சிட்டு சொந்த வீடு இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்’னு சொன்னங்க. அந்த அளவிற்கு இந்தப் படம் அவங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துச்சு.” என்று பேசியிருக்கிறார்.