‘96’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரேம்குமார் அப்படத்திற்கு பிறகு கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் “மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதி முடித்து இருப்பதாக பிரேம்குமார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ” ’96’ இரண்டாம் பாகத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஆர்வம் காட்டவில்லை. இதனால் பிரதீப் ரங்கநாதனை இயக்குநர் பிரேம்குமார் அணுகினார். தனது இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்தார். இரு நடிகர்களும் மறுத்துவிட்டதால் தற்போது புதிய நடிகரை இயக்குநர் தேடி வருகிறார்” என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.