இந்நிலையில் கோபிநாத்துடனான நேர்காணலில் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்துப் பேசியிருக்கும் பிரேம்குமார், “வெறும் 9 கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஆக்ஷன் அட்வன்சர் படம் பண்ணப்போறேன்.
குறைவான கதாபாத்திரத்தை வைத்து எடுப்பது எனக்குப் பிடிக்கும். சயின்ஸ் ஃபிக்ஷன் என அறிவியல் மற்றும் வரலாற்று படம் பண்ணப்போறேன்.
பகத் பாசிலை வைத்து எடுக்கும் படம் ஆக்ஷன் திரில்லர், வித்தியாசமாக இருக்கும். இப்போ நாம் பண்ணப்போற படமும் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும்.
ஆனால் கதைகள் வித்தியாசமாக இருந்தாலும், என்னுடைய படங்களில் உணர்ச்சிகளும், மனதைத் தொடும் உணர்வும் எப்போதும் மாறாது.
என்னுடைய 5வது படம் காதல் கதைதான், ஆனால் அதுல ஹீரோயினே வரமாட்டாங்க. ரொம்ப வித்தியாசம பண்ணணுமேனு பண்றதில்ல. கதை நம்ம எங்க கூட்டிகிட்டு போகுதோ அதோடு போக்குலேயே நீரோட்டம்போல போகணும்னு நினைக்கிறேன்.” என்று பேசியிருக்கிறார்