அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், ” ஒரு செழிப்பான காட’டின் உள்ளே, மிக அழகான அருவியின் கீழே, என் முகத்தில் மழைத் துளிகள் பட்டதை உணர்ந்து, ஒவ்வொரு மூச்சிலும் காட்டின் வாசனையை உணர்ந்து, மஞ்சள் வெயிலின் ஒளிக்கதிர்கள் மரக்கிளைகளின் வழியாக என் முகத்தில் ஒளிர்வதை உணர்ந்து… பெரும் உற்சாகமாக இருந்தேன்.
எனது ஆன்மா மிக மகிழ்ச்சியாக இருக்கும் இடம் இதுதான். இந்த அழகிய புகைப்படங்களை எடுத்த இந்த அற்புதமான குழுவை நான் பெரிதும் நேசிக்கிறேன். சிறு சிறு ஓடைகளைக் கடந்து அருவிக்குச் சென்றோம், இந்த அழகான படங்களை எடுப்பதற்காக…” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.