முக்கியமாக, அவர் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார்.தனது வாழ்க்கையிலுள்ள பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துபவர்.
அவரின் ரசிகர்களும் அதைப் பின்பற்றுகிறார்கள். அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் கோழைகளைப் போல துன்புறுத்தியது இல்லை.
அவர்கள் உயர்ந்த பண்புடன் நடந்துக் கொள்கிறார்கள். அஜித் சாரும் தன்னுடைய ரசிகர்கள் ஆன்லைனில் பெண்களை அச்சமூட்டுவதையோ, அவமரியாதை செய்வதையோ ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்.
அவர் அமைதியாக பலருக்கும் உதவி செய்திருக்கிறார்.
பெண்களுக்கு எதிரான மிரட்டல்களையோ அல்லது துன்புறுத்தல்களையோ ஊக்குவிக்கும் அல்லது அதைப் பற்றி மௌனமாக இருக்கும் எந்தத் தலைவரும் உண்மையான தலைவர் என்று அழைக்கப்படத் தகுதியற்றவர் என்று நான் நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
திவ்யா சத்யராஜ் இந்தப் பதிவுக்கு சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.