”சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உங்களோட சீசன்லதான் சிவகார்த்திகேயன் ஆங்கரா இருந்தார். அந்த நட்பு இப்போ எப்படி இருக்கு? உங்கக்கூட பாடினவங்க வேற யார்ல்லாம் நட்புல இருக்காங்க?
“சிவகார்த்திகேயன் எங்க சீசன்லதான் ஆங்கரா இருந்தார். ரொம்பவே வம்பிழுப்பார். அவர் எப்பவும் மாறவே இல்ல. மறக்கவும் இல்ல. மெசேஜ் பண்ணினா உடனே ரிப்ளை பண்ணுவார். ’அமரன்’ பார்த்துட்டு, பயங்கரா இருக்குன்னு மெசேஜ் பண்ணினேன். உடனே ரிப்ளை பண்ணினார். பழசை மறக்காம இருக்கிறது ரொம்ப நல்ல குணம். மற்றபடி எங்க சீசன்ல இருந்த சந்தோஷ், சாய் சரண், தீபக், ஸ்ரீனிவாஸ், சக்தின்னு எல்லாரும் நல்ல நண்பர்களா இருக்கோம். அடிக்கடி மீட் பண்ணிக்குவோம்”
”இளையராஜா- ரஹ்மான் – யுவன் – ஹாரிஸ் ஜெயராஜ் – அனிருத் – ஸ்ரீகாந்த் தேவா – ஜி.வி பிரகாஷ்- ஷான் ரோல்டன் இவர்களின் இசையில் உங்களின் ஃபேவரைட் பாடல்?”
”இளையராஜா சார் மியூசிக்குல ‘பார்த்த விழி…’,
ரஹ்மான் சார் மியூசிக்குல ‘இரு பூக்கள்’, ‘மலர்களே மலர்களே…’,
யுவன் சார் மியூசிக்குல, ‘ஒருநாளில் வாழ்க்கை…’, ‘மலர்களே…’, ‘உனக்காகத்தானே…’, ‘என் அன்பே…’ , புதுப்பேட்டையில எல்லா சாங்குமே பிடிக்கும்.
ஸ்ரீகாந்த் தேவா சார் மியூசிக்குல ‘ஆகாயம் பூமிக்கெல்லாம்…’ பாட்டு ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா, அந்த பாட்டை படத்துல பாடினதே நான் தான்.
‘மின்வெட்டு நாளில்…’, ‘நீ பார்த்த விழிகள்…’, ‘தேனி காத்தோரம்…’ பாடல்கள் அனிருத் சார் மியூசிக்குல பிடிக்கும்.
ஜி.வி சார் மியூசிக்குல ’காதல் நெருப்பின் நடனம்’ பிடிக்கும்.