Aamir Khan: 'நான் மன உளைச்சலில் தவித்தேன்; அப்போது அவர்தான்..'- சல்மான் கான் குறித்து அமீர்கான்

Aamir Khan: ‘நான் மன உளைச்சலில் தவித்தேன்; அப்போது அவர்தான்..’- சல்மான் கான் குறித்து அமீர்கான்


அமீர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம்  ‘சித்தாரே ஜமீன் பர்”.

திவி நிதி சர்மா எழுத்தில், இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்தத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அமீர்கான், சல்மான் கான் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

சித்தாரே ஜமீன் பர்

சித்தாரே ஜமீன் பர்

“ 2001 ஆம் ஆண்டு மனைவி ரீனா தத்தாவுடன் மனமுறிவு ஏற்பட்டபோது  மிகுந்த மன உளைச்சலில் தவித்தேன்.

அந்த சமயங்களில் மது அருந்திவிட்டு தனிமையில் இருப்பேன். ஒருநாள் சல்மான் கான் இரவு உணவு அருந்த வீட்டிற்கு வந்தார்.

அந்த நேரத்தில் சல்மான் கான் என்னிடம் மனம் விட்டு பேசினார். மணிக்கணக்காக நாங்கள் இருவரும் உரையாடினோம். 

என் மன அழுத்தம் முடிவுக்கு வந்தது. அங்கிருந்துதான் எங்கள் நட்பு தொடங்கியது” என்று அமீர்கான் பகிர்ந்திருக்கிறார். 



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *