அஜித்குமார் எடுத்ததை பார்த்தவர் யார்?
தனக்கு வண்டி ஓட்டத்தெரியாது… வேறு ஒருவரை வைத்து நகர்த்தி நிறுத்துகிறேன் என்று அந்த இளைஞர் சொன்னதாகச் சொல்கிறார்கள்.
நகர்த்தி நிறுத்திய அந்த நபர் யார்?
அவரை விசாரித்தார்களா?
மேலிட உத்தரவு வந்தால் மிருகத்தனமாக, உயிர் போகுமளவு தாக்கலாமா?
இவருக்கு வந்த வலிப்பும், மாரடைப்பும் சிறை சென்ற இந்த இளைஞரை விட எத்தனையோ வயதான பெரிய மனிதர்களுக்கு வராத மர்மம் என்ன?

ஏழைக்கு இதுதான் நீதியா?
பென்னிக்ஸ், ஜெயராஜ் வழக்கில் தீர்ப்பு என்ன?
ஶ்ரீமதி மரண விஷயம் என்னவாயிற்று?
நண்பர் திரு.ஆம்ஸ்ட்ராங் கொலையில் தீர்ப்பு என்ன?
எல்லாவற்றுக்கும் அரசைக் குறை கூறலாமா?
அரசுப்பதவியில் உள்ளவர்களால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணித்துக்கொண்டே இருக்க முடியுமா?
குற்றம் செய்தவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படுமா?
இப்படி அனைவர் மனங்களிலும் எண்ணற்ற கேள்விகள்!
காலமும், கடவுளும்தான் பதில் சொல்ல வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்