அதைமீறி குட் பேட் அக்லி படத்தில் “ஒத்து ரூபாயும் தாரே’, ‘இளமை இதோ இதோ’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு குறித்து நன்றாக அறிந்திருந்தும், பாடல்களை பயன்படுத்துவது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, இளையராஜாவின் வழக்கறிஞர் குழுவான மேத்ஸ் லாவ் அசோசியேட்ஸ் அனுப்பிய நோட்டீஸில்.
உடனடியாக குட் பேட் அக்லி படத்தின் திரையிடல், ஸ்ட்ரீமிங்கை நிறுத்த வேண்டுமென்றும், இளையராஜாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.