இந்நிலையில் நடிகை சாந்தி பிரியா The Indian Express நாளிதழுக்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். தனது கணவர் மாரடைப்பால் இறந்தது குறித்து அதில் பகிர்ந்திருக்கிறார்.
“எனது திருமண வாழ்க்கையை ரசித்து வாழ விரும்பினேன். நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவள், அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.
அவருக்காக சில விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். அவரின் மறைவை என்னால் மறக்கவே முடியாது.
வழக்கம் போல எல்லோரும் இரவு உணவிற்காக டைனிக் டேபிளில் அமர்ந்திருந்தோம்.

என் இளைய மகனிடம் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு விக்கல் வந்தது. மயங்கி விழுந்தார். பிறகுதான் அது மாரடைப்பு என்று தெரியவந்தது.
ஒருவருக்கு மாரடைப்பு வருவதை நான் முதன்முறையாகப் பார்த்தேன். எனது வீட்டிற்கு மேலே ஒரு மருத்துவர் தங்கியிருந்தார். அவரை அழைத்து வந்தோம்.
அவரும் என்னென்னவோ செய்து பார்த்தார், ஆனால் எனது கணவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
அப்போது என் உணர்வுகளை வெளிப்படுத்துவதா அல்லது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதா என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால் அந்தத் தருணத்தில் நான் யாரிடமும் உதவி கேட்க விரும்பவில்லை” என்று பகிர்ந்திருக்கிறார்.