இந்த உணவகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தத் தொடங்கியதும், ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் சோதனை நடந்து வருகிறது எனச் செய்திகள் வெளியாகின.
இந்த விஷயம் குறித்து ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நடிகர் ஆர்யா, “சென்னையில் ஐ.டி. ரெய்டு நடக்கும் உணவகத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த உணவகத்தின் உரிமையாளர் வேறு ஒருவர்,” எனக் கூறியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த குன்ஹி மூசா என்பவரே இந்த ‘சீ ஷெல்’ உணவகத்தின் உரிமையாளர் ஆவார்.
குன்ஹி மூசாவின் சென்னை தரமணியிலுள்ள இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.