நான் சாதிப்படம் எடுக்கவில்லை. சாதிக்கு எதிரான படம் எடுக்கிறேன். உங்களுடைய கேள்வி என்னைக் காயப்படுத்துகிறது.
எனவே, இனி என்னிடம் அப்படியான கேள்விகளைக் கேட்காதீர்கள். என்னிடம் இப்படியான கேள்விகள் மூலம் என் களத்தைப் பறிக்க நினைத்தால் நான் இன்னும் மூர்க்கமாக உழைப்பேன்.
என்னுடன் பணியாற்றியவர்களிடம் கேட்டுப்பாருங்கள். தொடர்ந்து இதுபோன்ற கேள்விகள் எழுந்தால், நான் ஊடகங்களை சந்திப்பதை தவிர்க்க விரும்புவேன்.
என்னுடைய படங்களை மட்டும் தொடர்ந்து இயக்கிக்கொண்டிருப்பேன். என்னை அப்போதும் இதே அன்புடன் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

