சந்தானம் நடித்திருக்கும் “டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சந்தானம் & கோவுடன், கெளதம் மேனன், செல்வராகவன் ஆகியோரும் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படம் வருகிற 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதில் சந்தானம் பேசுகையில், “தில்லுக்கு துட்டு 1, 2, டிடி நெக்ஸ்ட் லெவல் படங்கள்ல முக்கியமான பங்காக இருந்த இந்திரா செளந்தர்ராஜன் சார் இன்னைக்கு நம்மகூட இல்ல.
அவருடைய மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. சிம்பு சார் இன்னைக்கு வந்திருக்காரு. அவர் இல்லைனா, நான் இன்னைக்கு இங்க இல்ல.
அவருடைய ‘காதல் அழிவதில்லை’ படத்துல நான் பின்னாடி நிக்கிற ஒருவனாக நடிச்சிருப்பேன்.
அதுல என்னுடைய நடிப்பை கவனிச்சாரு. பிறகு, எனக்கு மன்மதன் படத்துல வாய்ப்பைக் கொடுத்தாரு.
அந்தப் படத்தோட முதல் நாள் படப்பிடிப்புல ‘உங்களுக்கான இன்ட்ரோ சீன்ல பில்டப் வைக்கிறோம்’னு சொன்னாரு.