இந்த நிகழ்வில் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், “டிராகன் மாதிரி அர்த்தமுள்ள, அழகான, கமர்ஷியல் திரைப்படம் வருவது ரொம்பக் கடினம்.
அப்படியான படத்தைக் கொடுத்த அஸ்வத் மாரிமுத்துவுக்கும், பிரதீப்புக்கும் நன்றி.
அடுத்த தலைமுறை இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து போலவும், பிரதீப் ரங்கநாதன் போலவும் இருக்க வேண்டும்.
இங்கு கதைதான் ராஜா. நல்ல கதைகளைச் சொன்னால், உலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். இளம் இயக்குநர்களுக்கு ரைட்டிங் ரொம்பவே முக்கியம்,” என்றார்.