எனக்கு தமிழ் தெரியாது. ஆடிஷனுக்கு எனக்கு கொடுக்கப்பட்ட வசனத்தை நிச்சயமாக என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால், பயிற்சி எடுத்து அதைச் செய்து முடிக்க கொஞ்சம் அவகாசம் எடுக்கும். பிறகு, இயக்குநரிடம், ‘முதலில் இந்தியில் பேசுகிறேன். அதில் என்னுடைய நடிப்பைப் பாருங்கள். பிறகு தமிழில் பேசுகிறேன்’ எனக் கேட்டு ஆடிஷன் செய்தேன்.
எனக்கு இந்தப் படத்தின் சாம் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. சிறிய கேரக்டராக இருந்தாலும் நான் நிச்சயமாக நடித்தாக வேண்டும் என விரும்பினேன். ஏனெனில், என்னுடைய கதாபாத்திரத்தை நான் சிறப்பு தோற்றமாகத்தான் பார்க்கிறேன்.
நான் படத்தில் மூன்று காட்சிகளில் மட்டும் வந்தாலும் அது பார்வையாளர்களிடையே தாக்கத்தைக் கொடுத்திருக்கிறது. அதுதான் இந்தக் கதாபாத்திரத்தை நான் தேர்வு செய்து நடித்ததற்குக் காரணம்” எனப் புன்னகைக்கிறார்.
“படப்பிடிப்பு தளம் எப்போதுமே ஜாலியாக இருக்கும். நாங்கள் அனைவரும் இணைந்து சில மைன்ட் கேம்ஸ் விளையாடுவோம். டென்ஷன் என்பதே இருக்காது.
எப்போதுமே ஜாலியாக இருப்போம். பிரதீப் சாரும் மமிதாவும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். மமிதா எனக்கு இன்னும் நெருக்கம் எனச் சொல்லலாம்.
அவருடைய அரவணைப்பு எனக்கு வீட்டில் இருப்பதுபோன்ற நிதானமான உணர்வைத் தரும். நான் சிறுவயதிலிருந்தே சரத்குமார் சாரின் மிகப்பெரிய ரசிகை. `காஞ்சனா’ படத்தில் வரும் அவருடைய கேரக்டர் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
அந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்துதான் நான் அவருக்கு ஃபேன் ஆகினேன். அதுபோல, டிராவிட் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் எனக்கு ரிலாக்ஸாக இருக்கும். அவர்தான் என்னுடைய நெருங்கிய நண்பர்.

