இருப்பினும், இரண்டாம் பாதியில் இட்லியை வெகு நேரம் வேகவைத்ததைக் குறைத்திருக்கலாம்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் தனுஷ் பாடிய ‘என்ன சுகம்’ பாடலும், ‘எத்தன சாமி’ பாடலும் நம் மனதைக் கவர்கின்றன.
பின்னணி இசையில் ‘பீல் குட்’ உணர்வைத் தர முயன்றிருக்கிறார். அக்காலத்துக் கிராமத்து வீடுகள், இட்லிக் கடை ஆகியவற்றில் கலை இயக்குநர் ஜாக்கியின் உழைப்பு தெரிகிறது.
நடிகர் மற்றும் இயக்குநர் என்ற இரட்டைப் பொறுப்புடன் தனுஷ் சுட்டிருக்கும் இந்த இட்லி, தமிழ் சினிமா ஏற்கெனவே பலமுறை அரைத்த மாவில் வெந்த இட்லிதான்!

கிராமத்து வாழ்வியல், சொந்த ஊர், அப்பாவின் தொழில் எனப் பலவற்றை இணைத்து ஒரு ‘பீல் குட்’ டிராமாவைத் தர முயன்றிருக்கிறார். அது ஆங்காங்கே ரசிக்கும்படியாக இருந்தாலும், சில இடங்களில் ‘க்ரிஞ்ச்’ மீட்டரையும் அதீத நாடகத் தன்மையையும் தொட்டுச் செல்கிறது.
அதேபோல், நவீனத்தை ஏற்றுக்கொள்ளாமல் பழமைவாதத்தைப் புகழ்ந்து பேசுவது போன்ற வசனங்கள் நம் கண்களை வேண்டுமானால் குளமாக்கலாம். ஆனால், நடைமுறையில் வளர்ச்சி என்ற மீனை அதில் பிடிக்க முடியாது என்பதே நிதர்சனம்!