நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்காலத் தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்பதை விட, மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப் போகிறது,” எனக் குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சந்திப்பைத் தொடர்ந்து இளையராஜாவின் கச்சேரியிலும் அண்ணாமலை பங்கேற்றிருக்கிறார்.
அங்கு பேசிய அண்ணாமலை, “இசைஞானி இளையராஜா இசையமைத்த அனைத்துப் பாடல்களையும் கேட்பதற்கு 17 ஆண்டுகள் ஆகும்.
நம் மகிழ்ச்சி, துக்கம், தூக்கம் என அனைத்துத் தருணங்களிலும் இளையராஜாவின் பாடல்கள் நிறைந்திருக்கும்.
பிரதமர் மோடி, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அன்பு செலுத்தும் ஒரே தலைவர் இளையராஜாதான்,” எனத் தெரிவித்தார்.