“உங்களுடைய கரியரின் தொடக்கத்திலேயே நல்ல நடிகர், சவாலான கதைகளை தேர்வு செய்து நடிப்பவர்னு பெயர் கிடைச்சது. இந்த கமென்ட் உங்க கரியர் சார்ந்து நீங்க எடுக்ககூடிய முடிவுகளுக்கு பிரஷரைக் கொடுத்துச்சா?”
“இல்ல, நீங்க சொல்ற மாதிரியான பாராட்டுகள் வந்ததுனே அப்போ தெரியாது. இப்போதான் அதெல்லாம் எனக்கு தெரியுது. சாதரணமாக படங்கள் நடிச்சிட்டு வர்றோம்னுதான் எண்ணம் இருக்கும். `83′ படத்துக்கு நமக்கு பயங்கரமான பாராட்டுகளெல்லாம் கிடைக்கும்னு நான் நினைச்சேன். ஆனா, சென்னையில எனக்கு அப்படியான பாராட்டுகளெல்லாம் எனக்கு கிடைக்கல. அதே சமயம் வெளியூர்ல நல்ல பாராட்டுகள் கிடைக்கும். தெலுங்கு மக்களுக்கு நான் `கோ’, `யாத்ரா’ மாதிரியான படங்கள் மூலமாக பரிச்சயமாகி இருக்கேன். `ராம்’ படத்துக்கு நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் பாராட்டுகள் கிடைச்சது. அதே சமயம் `கற்றது தமிழ்’ படத்துக்கு எனக்கு 10 வருஷத்துக்குப் பிறகுதான் பாராட்டுகள் கிடைச்சது. பெரியவங்களுக்கு `சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ஒரு வகையிலான டாக்சிக் திரைப்படமாகதான் பார்ப்பாங்க. தாமதமாகதான் இதெல்லாம் புரிஞ்சது. அப்பாவுக்கு `சிவா மனசுல சக்தி’, `ராம்’, `கற்றது தமிழ்’ மாதிரியான திரைப்படங்கள் பிடிக்காது. அவருக்கு `திருபாச்சி’ மாதிரியான படங்கள்தான் ரொம்ப பிடிக்கும். அவருக்கு அதுதான் குடும்ப திரைப்படங்கள்தான் பிடிக்கும். நான் நடிச்சிருந்த `ஆசை ஆசையாய்’ படத்தின் கதை முதல்ல பிரசாந்த் சாருக்கு சொன்னதுதான். அப்புறம் எங்க அப்பாகிட்ட `உங்கப் பையனை வச்சே பண்ணிடலாம்’னு இயக்குநர் சொன்னாரு. நான் முதல்ல ஒத்துக்கவே இல்ல. விபத்தாகதான் நான் நடிகனானேன்.”