Kamal: ``நீங்கள் மொழியியல் வல்லுநரா? மன்னிப்பு கேட்டிருக்கலாமே..'' - கர்நாடகா நீதிமன்றம் கேள்வி

Kamal: “நீங்கள் மொழியியல் வல்லுநரா? மன்னிப்பு கேட்டிருக்கலாமே..” – கர்நாடகா நீதிமன்றம் கேள்வி


விசாரணையில் கமல் ஹாசனை சராமரியாகச் சாடிய நீதிபதி எம்.நாகபிரசன்னா, “நீங்கள் கமல் ஹாசனாக, வேறு யாராக இருந்தாலும், மக்களின் உணர்வுகளை புண்படுத்த முடியாது.

இந்த நாடு மொழியின் அடிப்படையில் மாநிலமாக பிரிக்கப்பட்டது. ஒரு பிரபலம் அவ்வாறு கூற முடியாது. கர்நாடக மக்கள் மன்னிப்பு மட்டுமே கேட்டார்கள்.

ஆனால், நீங்கள் பாதுகாப்பு தேடி இங்கு வந்துள்ளீர்கள்.நீங்கள் வரலாற்று ஆய்வாளரா நீங்கள்? மொழியியல் வல்லுநரா நீங்கள்? எதன் அடிப்படையில் நீங்கள் அவ்வாறு பேசினீர்கள்?

ஒரு மன்னிப்பு கேட்டால் எல்லாம் தீர்ந்திருக்கும். ராஜகோபாலாச்சாரியும் இதே போன்ற ஒன்றைச் சொல்லி மன்னிப்பு கேட்டார்.

கர்நாடக உயர் நீதிமன்றம்

கர்நாடக உயர் நீதிமன்றம்

நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், எதற்காகக் கர்நாடகாவில் படம் ஏன் ஓட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்.

மொழி என்பது மக்களின் நிலத்துடன் இணைக்கப்பட்ட ஒரு உணர்வு. கன்னடம் ஒரு வலுவான மொழி. இதுபோன்ற கருத்துக்களால் அதன் பலம் குறைந்துவிடாது.

அதேசமயம், கருத்து சுதந்திரத்தை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த அனுமதிக்க முடியாது. மன்னிப்பு கேளுங்கள் பிறகு எந்த பிரச்னையும் இருக்காது.

கர்நாடகாவிலிருந்து சில கோடிகள் சம்பாதிக்கவும் நீங்கள் விரும்புகிறீர்கள். மன்னிப்பது கேட்பது ஒன்று மட்டுமே உங்கள் முன் இருக்கிறது.” என்று கூறினார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *