நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன “பெத்தராயுடு’ படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஓட்டி மோகன் பாபுவுடன் நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஜூன் 16) கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
மேலும், மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கண்ணப்பா’ படத்தையும் குடும்பத்துடன் பார்த்திருக்கிறார். இதனை மோகன் பாபு புகைப்படத்துடன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மோகன் பாபு வெளியிட்டிருக்கும் பதிவில், “‘பெத்தராயுடு’ படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதே நாளில் என் சிறந்த நண்பர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் கண்ணப்பா திரைப்படத்தைப் பார்த்தார்.
படத்தைப் பார்த்த பிறகு அவர் அளித்த அன்பு, அரவணைப்பு மற்றும் ஊக்கம் ஆகியவற்றை என் வாழ்நாளில் மறக்க முடியாதவை. நன்றி நண்பர்” என்று பதிவிட்டிருக்கிறார்.