இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திற்கு பஹத் பாசிலிடம் நடிக்கக் கேட்டனர். அவரது தேதிகள் கிடைக்காமல் போனதால், அந்த ரோலில் நிவின் பாலி நடிக்கிறார்.
ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் முதன் முறையாக கார்த்தியின் ஜோடியாகிறார். பிரபுவும் கமிட் ஆகியிருக்கிறார். படத்தில் வடிவேலு நடிப்பதாக வந்த தகவல்கள் உண்மையில்லை.
படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் ஆக இருக்கக்கூடும் என்கிறார்கள். கார்த்தியின் ‘கைதி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ஒளிப்பதிவாளரான சத்யன் சூரியன் கேமராவைக் கவனிக்கிறார். படத்தொகுப்பு பிலோமின் ராஜ்.
சமீபத்தில் வெளியான நானியின் ‘ஹிட் : த தேர்டு கேஸ்’ படத்தில் கார்த்தி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆகையால், ‘கார்த்தி 29’லும் அவர் கெஸ்ட் ரோலில் நடிப்பார் என்ற பேச்சு இருக்கிறது.
இது தவிர, படத்திற்கு ‘மார்ஷல்’ என்று டைட்டில் வைக்க உள்ளதாகப் பேச்சு இருக்கிறது. நாளை காலை பிரசாத் லேப்பில் படப்பூஜையும், படப்பிடிப்பும் ஆரம்பமாகிறது.
தொடர்ந்து காரைக்கால், ராமேஸ்வரம் ஆகிய கடற்பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இதற்காக செட்களும் அமைத்துள்ளனர். தமிழ் இயக்கும் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கைதி 2’விற்கு வருகிறார் கார்த்தி.