கீர்த்தி பாண்டியன் தற்போது ‘அஃகேனம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். உதய் கே இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அருண் பாண்டியன், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 15) சென்னையில் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி, “இப்படத்தின் இயக்குநர் இந்தக் கதையை நான்கு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொல்லியபோது அவர் இயக்கிய ‘யாக்கை திரி’ என்ற குறும்படத்தைக் காண்பித்தார். அதைப் பார்த்தவுடனேயே இப்படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன். என் அப்பா ஊமை விழிகள், இணைந்த கைகள் ஆகிய படங்களில் நடித்தபோது நான் பிறக்கவில்லை.
அவர் திரைப்பட கல்லூரி மாணவர்களுடன் இணைந்து எவ்வளவு ஆர்வமாக பணியாற்றியிருப்பாரோ அதே ஆர்வத்தை இந்தப் படத்தின் பணிகளிலும் காண்பித்தார்.
இந்தப் படத்தின் திரைக்கதை அவருடைய பெயரில்தான் இருக்கும். இதில் நடிகையாக மட்டும்தான் நான் பணியாற்றியிருக்கிறேன். இப்படத்தை பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம். படத்தில் இடம்பெற்றிருக்கும் கேரக்டர்கள் சில விஷயங்களைச் செய்யும்.

தன் அப்பாவுடன் கீர்த்தி பாண்டியன் இந்தப் படத்தில் இந்திரா என்னும் கதாபாத்திரத்தில் கேப் ஓட்டுநராக நடித்திருக்கிறேன்.
எனக்கு ட்ரைவிங் என்றால் அவ்வளவு பிடிக்கும். நான் நடிக்க வந்திருக்காவிட்டால் கண்டிப்பாக கார் ரேஸ் வீராங்கனையாக ஆகியிருப்பேன். எனக்கு எப்போதுமே ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கும் என் தந்தைதான் எனக்கு ஹீரோ” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR