Kingdom: "இந்த மேதை யாரென...'' - அனிருத்துக்கு காதல் கடிதம் எழுதிய விஜய் தேவரகொண்டா! |Vijay Devarakonda |Anirudh

Kingdom: “இந்த மேதை யாரென…” – அனிருத்துக்கு காதல் கடிதம் எழுதிய விஜய் தேவரகொண்டா! |Vijay Devarakonda |Anirudh


அந்தப் பதிவில் அவர், “நாங்கள் ஒரு காதல் பாடலை வெளியிடும் இந்தத் தருணத்தில், அனிருத்திற்கு என்னுடைய சிறிய காதல் கடிதம் இது.

‘VIP’ மற்றும் ‘3’ படங்கள் வெளியான காலத்திலிருந்தே நான் அனிருத்தின் பெரிய ரசிகன். இந்த மேதை யார் என நான் ஆச்சரியப்பட்டேன்.

ஒருநாள் நான் நடிகனானால், அவருடைய இசை என் படத்தில் ஒலிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

இன்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய 13-வது திரைப்படம் 28 நாள்களில் வெளியாகவுள்ள நிலையில், அனிருத்-விஜய் தேவரகொண்டாவின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.

Vijay Devarakonda About Anirudh

Vijay Devarakonda About Anirudh

இந்தத் தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியான மனிதனாகவும், மகிழ்ச்சியான நடிகனாகவும் இருக்கிறேன்.

இன்று முதல் நாங்கள் எங்கள் உலகத்தையும் உணர்வுகளையும் உங்களுக்குத் திறந்துவிடுகிறோம்.

இது உங்களுக்கு மகிழ்ச்சியையும் நினைவுகளையும் கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *