மிஷ்கினைப் பாட வைத்தது பற்றி பேசுகையில், “மிஷ்கின் சாருக்கு நல்ல மியூசிக் சென்ஸ் இருக்கு. சங்கீத கலாநிதி சஞ்ஜய் சுப்ரமணியம் சார்தான் என்னுடைய குருநாதர். அவரும் மிஷ்கின் சாரும் ரொம்பவே க்ளோஸாகப் பழகுவாங்க.
ரெண்டு பேரும் இசை பத்தியும், இலக்கியம் பத்தியும் நிறைய விஷயங்கள் பேசுவாங்க. ஒரு பஞ்சு மாதிரி மிஷ்கின் சார் அனைத்து விஷயங்களையும் எடுத்துப்பாரு. ஒரு சூப் சாங்கை அவரைப் பாட வைக்கிறோம்னு எனக்கு முதல்ல தயக்கமாக இருந்தது.
ஆனா, அவர் மியூசிக்கலாகப் பாடல் நல்லா இருக்குனு சொன்னாரு. அவர் சிறந்த பாடகரும்கூட. அவர் பாடியிருக்கிற இன்னொரு பாடலையும் நான் கேட்டேன். அந்தப் பாடலும் அருமையாக இருந்தது.
அவர் மியூசிக் படிச்சிட்டு இருக்கார்னு கேள்விப்பட்டிருக்கேன். இசைக் கலைஞராகதான் அவரைப் பாடக் கூப்பிட்டேன். விளம்பரத்திற்காக அவரைப் பாட வைக்கல.” எனப் பேசினார்